ப4க்1த்யா த்1வனன்யயா ஶக்1ய அஹமேவம்விதோ4ர்ஜுன |
ஞாது1ம் த்3ரஷ்டு1ம் ச1 த1த்1த்1வேன ப்1ரவேஷ்டு1ம் ச1 ப1ரந்த1ப1 ||54||
பக்த்யா—--பக்தியால்; து—--மட்டுமே; அனன்யயா--—கலப்படமற்ற; ஶக்யஹ--—இயலும்; அஹம்—நான்; ஏவம்-விதஹ--—இவ்வாறு; அர்ஜுன--—அர்ஜுனன்; ஞாதும்--—அறியப்பட முடியும்; த்ரஷ்டும்--—பார்க்க முடியும்; ச--—மற்றும்; தத்வேன--—உண்மையாக; ப்ரவேஷ்டும்--—(என்னுடன் ஐக்கியம்) நுழைய; ச--—மற்றும்; பரந்தப---எதிரிகளை எரிப்பவனே,
BG 11.54: ஓ அர்ஜுனா, அலாதியான கலப்படமற்ற பக்தியினால் மட்டுமே என்னை உன் முன்னால் நின்று இருக்கும் வடிவத்தில் அறிய முடியும். அதன் மூலம், என் தெய்வீக தரிசனத்தைப் பெற்றவுடன், எதிரிகளை எரிப்பவனே, ஒருவன் என்னுடன் ஐக்கியமாக முடியும்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அவரை அடைவதற்கான பக்தியை வழிமுறையாக வலியுறுத்துகிறார். முன்னதாக, 11.48 வசனத்தில், பக்தியால் மட்டுமே அவரது ப்ரபஞ்ச ரூபத்தை காண முடியும் என்று கூறியுள்ளார். இப்பொழுது, இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் முன் நிற்கும் அவரது இரு கரங்களை உடைய வடிவத்தை பக்தியின் மூலம் மட்டுமே உணர முடியும் என்று உறுதியாக அறிவிக்கிறார். இது வேத சாஸ்திரங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது:
ப4க்1தி1ரேவைனம் நயதி1 ப4க்1தி1ரேவைனம் ப1ஶ்யதி1 ப4க்1தி1ரேவைனம்
த3ர்ஶயதி1 ப4க்1தி1 வஶஹ பு1ருஷோ ப4க்1தி1ரேவ க3ரீயஸி
(மாத2ர் ஸ்ருதி1)
‘பக்தி ஒன்றே கடவுளோடு நம்மை இணைக்கும்; பக்தி மட்டுமே அவரைக் காண உதவும்; பக்தி ஒன்றே அவரை அடைய உதவும்; எல்லா வழிகளிலும் சிறந்த உண்மையான பக்தியின் மூலம் கடவுள் அடிமைப்படுத்தப்படுகிறார்.’
ந ஸாத4யதி1 மாம் யோகோ3 ந ஸாங்க்2யம் த4ர்ம உத்3த4வ
ந ஸ்வாத்4யாயஸ் த1பஸ் தி1யாகோ3 யதா2 ப4க்1தி1ர் மமோர்ஜிதா1
(பா4க3வத1ம் 11.14.20)
‘உத்தவ், நான் என் பக்தர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து அவர்களால் வெல்லப்படுகிறேன். ஆனால் பக்தியில் ஈடுபடாதவர்கள், அஷ்டாங்க யோகம், ஸாங்கியம் மற்றும் பிற தத்துவங்களைப் படிப்பது, புண்ணிய செயல்கள் மற்றும் துறவுகளை மேற்கொள்வது அல்லது துறவறத்தை வளர்ப்பது போன்றவற்றால் ஒருபொழுதும் அடைய முடியாது.’
ப4க்1த்1யாஹம் ஏக1யா க்3ராஹ்யஹ ஶ்ரத்3த4யாத்1மா ப்1ரியஹ ஸதா1ம் (பா4க3வத1ம் 11.14.21
‘நான் பக்தியின் மூலம் மட்டுமே அடையப்படுகிறேன். நம்பிக்கையுடன் என் பக்தியில் ஈடுபடுபவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
மிலாஹின் ந ரகு4ப1தி1 பி3னு அனுராகா3, கி1யே ஜோக3 த1ப1 ஞான பி3ராகா3
(ராமாயணம்)
‘பக்தி இல்லாமல், அஷ்டாங்க யோகம், துறவு, அறிவு, பற்றின்மை ஆகியவற்றின் மூலம் ஒருவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் கடவுளை அடைய முடியாது.’ அடுத்த வசனத்தில், பக்தியின் தன்மையை ஸ்ரீ கிருஷ்ணர் விவரிக்கிறார்.